2001-ம வருடம்,
காலை நேரம் கள்ளகுறிச்சி டவுனில் ஜெயலட்சுமி ஐயர்ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு எதிரில் உள்ள வேலாயுதம லாட்ரி கடையில்
பூடான் குலுக்கல் சீட்டு ஒன்றினை வாங்கினேன். நம்பரை பார்த்ததும்
ஏதாவது சிறு பரிசாவது விழும் என தோன்றியது.நம்பர்-34566.
மனம் முழுக்க கசப்பும் , பரிதவிப்புமான வாழ்க்கை .நைனார் பாளையம் கிராமத்தில் கிராமப்புரமருத்துவராக காலம் ஓடி கொண்டு இருந்தது .தினசரி
வருமானம் குடும்பம் நடத்த சரியாகஇருந்த்தது.இரண்டு லக்ஸ ரூபாய் கடன்
சுமை மனதை பாரமாய் அழுத்த,திகைத்து நின்றகாலம்.
மறுநாள் வழக்கம் போல் விடிந்தது . காலையில் என்னுடைய கிளினிக்கில் அமர்ந்து நோயாளிகளை பார்த்து கொண்டிருந்தேன் .மாலைவரை
தொழில் நாட்டத்தில் எனைமறந்து இருந்தேன் .இரவு சில மருந்துகள் வாங்க
ஆத்தூர் நகரம் சென்றேன் .முதல்நாள் லாட்டரி சீட்டு வாங்கியது நினைவுக்கு வர
அங்குள்ள லாட்டரிசீட்டு கடையை நாடி சென்றேன் .மறக்க கூடிய நம்பரா அது .
நன்றாகநினைவு இருந்தது .
யோகலட்சுமி மலை பதிப்பினை பார்த்தேன் .சிறுபரிசு ஏதாவது விழுந்து இருக்குமோ என தேடினேன் .மனம் ஏமாற்றத்தில் கரைந்துகொண்டு வந்தது .
ஏதுமில்லை .ஏமாறரத்தில் பழகிய மனம் பேப்பரை மடிக்க முற்படுகையில்
அனிச்சையாக முதல பரிசு நம்பரை பார்த்தேன் .34566 .
உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு .ஒருகணம் நம்பமுடியவில்லை .காண்பது கனவா புரியவில்லை. சீட்டைவேறு கையேடு எடுத்து வரவில்லை விழிகளும், மனமும் நம்மை ஏமாற்றுகிறதா ? முதல் பரிசு நம்பரோடு நாம் வாங்கி இருக்கும் நம்பரும் மனமயக்கத்தால் ஒன்றுபோல் தோன்றுகிறதா ? பரிசு உனக்குத்தான் என உள்ளம் துள்ளியது .அடக்கிகொண்டேன் .பஸ் ஏறி நைனார் பாளையம் நோக்கி சென்றேன்
கடந்தகால கசப்பான வாழ்க்கை ,கடனால் பட்ட அவமானங்கள் ,கசந்துபோன உறவுகள் ,சொந்தவீடிலேயே அந்நியமாகிப்போன அவலங்கள் , வறுமையால் அறிந்துக்கொண்ட நிஜமுகங்கள் ,எல்லாம் வரிசையாக வந்து நினைவில் மோதியது .மனதையும் ,அறிவையும் , வாழ்வையும் ,கட்டியிருந்த விலங்கு நிமிடத்தில் அறுபட்டுப்போன நிம்மதி .
வீடுவந்ததும் நம்பரை சரிபார்த்து நிம்மதியானேன் .என்வாழ்வில் வெளிச்சம் பரவிய அந்த்கனங்களை அனுபவித்தேன் .இரவு பதினோருமணி லாட்டரியில்
முதல் பரிசு விழ்ந்ததை சொன்னேன் .ஐந்து லக்சரூபாய் பரிசுத்தொகை .
அத்தனை கஷ்டங்களு ம நொடியில் தீர்ந்து போன அதிசயத்தை அவளால்
ஜீரணிக்கமுடியவில்லை .அன்றைய இரவு மனம் சந்தோசத்தால் சிறிது கூட
தூங்க வில்லை .மறுநாள் வருமான வரி பிடித்தம் போக மூன்றே முக்கால் லக்ச ரூபாய் கையில் வந்தது .
நண்பர்களே இந்த பரிசு பணம் நான் வாங்கும் வரை . ஜோதிடம் குறித்த எந்த அறிவும் நாட்டமும் இல்லாமலிருந்தேன் .
வியாழன், 27 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக